மீண்டும் வருகிறது உங்களது பேவரட் சீரியல்.!

செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பு விரைவில் துவங்கபடும் என்று ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் . அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம். இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு பிடித்த சீரியல் விரைவில் ஒளிப்பரப்ப படும் என்று ஜி தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆம், சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை 60பேரை வைத்து மட்டும் தொடங்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து ஜி தமிழ் தொலைக்காட்சி படப்பிடிப்புகளும் விரைவில்   துவங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் TRP-ல் கீழே தள்ளப்பட்ட ஜீ தமிழ் கண்டிப்பாக உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.