எதிரில் இருப்பவர்களை கிண்டல் செய்தால் தான் காமெடி வரும் : நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர், மன்மதன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நகைசுவை நடிகராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ1திரைப்படத்தின் ட்ரைலரின் வசனம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காமெடி செய்ய சுதாஹிராம் வேண்டும் என்றும், குறை சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி காமெடி செய்வது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எந்த நகைசுவை நடிகராக இருந்தாலும், எதிரில் உள்ளவர்களை கிண்டல் செய்தால் தான் காமெடி வரும் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.