#Latest Update:இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அறிவாலயம் வந்த மதிமுக

திமுகவுடன் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மதிமுக தலைவர்கள்  அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.

மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ,தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா ,செந்தில் அதிபன் ஆகியோர் அறிவாலயம் வந்துள்ளனர் .

மதிமுக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குமாறும் தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கூறிவந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக தனது கூட்டணி காட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை ஒதுக்கியுள்ளது.இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில், திமுக 6 தொகுதிகள் வரை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk