போகிப் பண்டிகையின் வரலாறும், கொண்டாடப்படுவதற்கான நோக்கமும் அறியலாம் வாருங்கள்!

பழையன கழிந்து புதியன புகும் போகி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் வரலாறு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

தமிழ் வருடத்தில் மார்கழி மாதம் கடைசி நாளன்று பொங்கல் திருநாளுக்கும் முந்தின தினம் கொண்டாட படக்கூடிய பண்டிகை போகி பண்டிகை. பழைய பொருட்களை எரித்து புதிய வருடத்திற்குள் நுழைவதற்காக கொண்டாடக்கூடிய இந்த போகிப்பண்டிகை பழங்காலங்களில் எப்படிக் கொண்டாடப்பட்டது தெரியுமா? வீட்டில் உள்ள பழைய உடைகள் மற்றும் பொருட்களை வீட்டின் முன்பு எரித்து பழையவை அனைத்தும் கழிந்துவிட்டது என மனதார நினைக்கக்கூடிய பண்டிகையாக தான் இந்த போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த பழைய பொருட்களை எரிப்பது போல பழைய காயப்பட்ட மனதையும் தீமையான எண்ணங்களையும் எரித்து புதிய மனிதனாய் புத்துணர்வோடு வாழுவதே இந்த போகிப் பண்டிகையின் நோக்கமாக கருதப்படுகிறது. போக்கி என்று அழைக்கப்பட்ட இந்த பண்டிகை நாளடைவில் மருவி போகி என்று ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், முந்தைய காலத்தில் எல்லாம் பழைய மண்பாண்டங்கள், துணிகள் ஆகிய பொருட்களை எரித்து தான் இந்த பண்டிகையை கொண்டாடினார். ஆனால் தற்போது அதிக அளவில் பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் தான் எரிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நாம் தூண்களை மட்டும் எரித்தும் கொண்டாடலாம். இந்த வருடம் 2021 ஜனவரி 13-ஆம் தேதி புதன்கிழமை அன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை பிறக்க உள்ள புது ஆண்டை வரவேற்கும் விதமாக கொண்டாடப்பட கூடிய இந்த போகிப் பண்டிகையில் வீட்டுக்கு வர்ணம் பூசி அழகு படுத்துவதும் வழக்கம். இந்த பண்டிகை முற்காலத்தில் என்ன நோக்கத்திற்காக கொண்டாடப்பட்டது என்றால் நம் உறவுகளுடன் இருக்கக்கூடிய மனக்கசப்பு மற்றும் தீய எண்ணங்கள் நீங்கி அவருடனான உறவு மேம்பட்டு மகிழ்ச்சியுடன் வாழவும், பிறருடன் ஒற்றுமையாக இருக்கவும் தான் கொண்டாடப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

5 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

7 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

8 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

8 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

8 hours ago