வாணியம்பாடியில் மீண்டும் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை…!!

வாணியம்பாடியில் மீண்டும் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை…!!

வாணியம்பாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதை அடுத்து கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில், கடந்த 27 ஆம் தேதி, சிறுத்தை ஒன்று, அப்பகுதியை சேர்ந்த 4 பேரை தாக்கி விட்டு தப்பியோடியது.

இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜாமணிவட்டம் பகுதிக்கு நள்ளிரவில் வந்த சிறுத்தை, அப்பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியை தாக்கியது.

கன்றுக்குட்டியின் சத்தை கேட்டு வந்த அப்பகுதி மக்கள், தீப்பந்தம் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் சிறுத்தையை விரட்டினர். படுகாயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கிராம மக்கள் அச்சம் அடைந்திருப்பதை தொடர்ந்து, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *