தன்னுடனான நட்பை முறித்துக் கொண்டதால் தனது தோழியையே கழுத்தை நெரித்து கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசி உள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் எனும் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண்மணி தான் அனுஷா. இவர் நரசிம்மராவ் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் அதே கல்லூரியில் ஒன்றாகப் படித்து வரக்கூடிய அனுஷாவின் நண்பர்தான் விஷ்ணுவர்த்தன். இருவரும் இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அனுஷா விஷ்ணு உடனான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரி முடிந்து வீடு திரும்புகையில், ஏன் நட்பை துண்டித்துக் கொள்கிறாய் என விஷ்ணு கேள்வி எழுப்ப, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஷ்ணு அனுஷாவின் கழுத்தை நெரித்து செல்லும் வழியிலேயே கொலை செய்துள்ளார்.
அதன்பின் தான் செய்தது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அருகிலிருந்த கழிவு நீரோடையில் அனுஷாவின் உடலை வீசி விட்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார் விஷ்ணு. கொல்லப்பட்ட விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் உண்மையை விஷ்ணு ஒப்புக் கொண்ட பின்பு தான் வெளியில் அனுஷா உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, விஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனுஷாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கே வந்த காவலர்கள் எவ்வளவோ பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவடையாத நிலையில், கொலை குற்றவாளி மீது விசாரணை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அனுஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடியிருப்பதற்கு ஒரு வீடும் கொடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் நிதியையும் அறிவித்துள்ளார். தன்னுடனான நட்பை முறித்துக் கொண்டதற்காக பெண்மணியை கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…