கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு -ஆட்சியர் ராசாமணி

கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.வேட்பாளர்கள், பிரதிநிதிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், மழையின் காரணமாக வேலை செய்யவில்லை. சிசிடிவி கேமரா ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment