நம் வீட்டு பூஜை ஆனாலும் சரி, கோவில் சென்று வழிபடுவது என்றாலும் சரி நமது பூஜை தட்டில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய் மற்றும் வாழைபழம் ஆகும். இவ்விரண்டையும் நாம் படைப்பதற்கு காரணம் இவைதான்,
அதாவது, வாழைப்பழத்திற்கு கொட்டை கிடையாது. அதாவது மற்ற அனைத்து பழங்களுக்கும் கொட்டை இருக்கும். அவை நாம் சாப்பிட்டு போட்டால் வளர்ந்துவிடும். ஆனால் வாழைப்பழத்தை அப்படியே புதைத்தாலும் வளராது.
அதே போல தான் தேங்காயையும் அப்படியே புதைத்தால் வளராது. இவை இரண்டையும் நாம் கடவுளுக்கு படைப்பது எதற்கென்றால் இவை இரண்டையும் போல மறு பிறவி இல்லாத வரம் வேண்டும். அடுத்த பிறவி வேண்டாம் என கடவுளிடம் நாம் மறைமுகமாக வேண்டிக்கொள்கிறோம்.
மற்ற பழங்கள் நாம் தின்று போட்ட கொட்டைகளில் இருந்து மரம் வளர்ந்து அதன் மூலம் பழம் கிடைத்து அதனை சாமிக்கு படைத்தால் அது எச்சில் பழம் போல கருதப்படும். ஆனால் வாழைமரமும், தென்னை மரமும் பழத்தின் மூலம் வளருவதில்லை. மாறாக அவை வாழைக்கன்னு, தென்னங்கன்னு மூலமாக வளரும்.ஆதலால் தான் வாழைப்பழமும், தேங்காயும் பூஜை பொருட்களில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…