2,200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் coca-cola நிறுவனம்!

coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர்.

பிரபல குளிர்பான நிறுவனமான coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர். கொரோனா தொற்று, காரணமாக குறைவான மக்களே  தியேட்டர்கள், பார்கள் மற்றும் மரங்கள் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.  இதனால் coca-cola விற்பனை மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதானால் coca-cola நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அவர்கள் வழங்கிய தகவலின் படி, இதில் தன்னார்வ வாங்குதல்கள் மற்றும் பணி நீக்கங்கள் அடங்கும் என்றும், இந்த ஆண்டின் தொடக்கத்தில்  coca-cola-ல் 86 ஆயிரத்து 200 ஊழியர்கள் இருந்தனர். அமெரிக்காவில் 10 ,400 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள் நடத்தை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். தற்போதைய தொற்றுநோய் காரணமாக இந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் நிறுவனம் இந்த முடிவை இவ்வளவு சீக்கிரம் எடுக்க நிச்சயமாக நோய் தொற்றும் ஒரு காரணமாகி விட்டது என்று கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.