12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாண்வர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள்.!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.

கடந்த 8-ஆம் தேதி வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 47,387 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வில் 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர்.

தற்போது, தேர்ச்சி பெறதா மாணவர்களை துணைத் தேர்வுக்கு தயார் செய்ய பயிற்சி வகுப்புகள் அந்தந்த பள்ளிகளில் இன்று முதல் தொடங்குகின்றன. துணைத் தேர்வுக்கு 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறவுள்ளது.

ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெற உள்ளளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.