வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.!

வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனையில் மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்தும் ஊரடங்கு நீடிப்பதா ? அல்லது தளர்வு செய்யப்படுவதா? பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல் வெளியானது. 

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் இருக்கும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனையில் மேற்கொள்ள உள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 29ம் தேதி காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டமானது தொடங்கப்பட உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube