#Breaking: தொடங்குமா மின்சார ரயில் சேவை? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதனைதொடர்ந்து, தற்பொழுது மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்கு திறப்பு, மின்சார ரயில் சேவைகள் தொடக்கம், உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.