தன்னை நக்கல் செய்தவருக்கு “கழிவறையை சுத்தம் செய்வது கேவலம் அல்ல, புனிதமான செயல்”-எம்.பி பதிலடி ..!

தர்மபுரி எம்.பி செந்தில் குமார் தனது ட்விட்டரில்  சமீபத்தில் ஒரு பதிவு பதிவிட்டு இருந்தார். அந்த பதவியில் மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தெருவிளக்கு பிரச்சனை தொடர்பாக  மக்கள் புகார் தெரிவித்தனர்.அதை சரிசெய்து விட்டதாக அவர் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.

அதற்கு பழனி என்பவர் “பாத்ரூம் அடைச்சிருக்கு  வந்து சுத்தம் செய்து தருவீர்களா” என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த எம்.பி செந்தில்குமார். இதில் என்ன இருக்கு எங்கே என்று சொலல்லுங்கள்., நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல் தான். என எம்.பி செந்தில்குமார் நிதானமாக பதில் அளித்து உள்ளார். அவரின் நிதானமாக பதிலுக்கு பலர் பாராட்டி வருகின்றன.

author avatar
murugan