#BREAKING: தமிழகத்தில் 1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை..!

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 க்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும்.

பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் வரும் 20-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1-ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan