சிபிஎஸ்இ வாரியத்தில் படிக்கக்கூடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்க வேண்டும் என முடிவு செய்து வருவதாகவும் மாணவர்கள் பீதியடைய வேண்டாம் எனவும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தற்போது சிபிஎஸ்இ செயலாளர் கூறுகையில், சிபிஎஸ்இ வாரியத்தில் படிக்கக்கூடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்யும் செயல்முறை தொடங்குகிறது எனவும், சிபிஎஸ்இ ஆசிரியர்களும் மாணவர்களும் மதிப்பெண் குறித்து பீதி அடைய வேண்டாம் எனவும், மதிப்பெண் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்ததும் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த…
Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…
Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…