கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “டாடா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
விமர்சனத்தை போலவே படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தனையடுத்து, நேற்று படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கவின், அபர்ணா தாஸ், கணேஷ் கே பாபு, தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய அம்பேத்குமார் “நிச்சயமாக கவின் சிவகார்த்திகேயனை போல வருவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘மனம் கொத்தி பறவை’ என்ற திரைப்படத்தை நான் தயாரித்தேன். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
அந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடத்திய அதே ஓட்டலில்தான் இப்போது ‘டாடா’ திரைப்படத்தினுடைய வெற்றி விழா நடத்துக்கிறோம்; நிச்சயமாக சிவகார்த்திகேயனை போல கவின் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே…
கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில்…