சினிமா தயாரிப்பாளருக்கான மானியம்-அரசிடம் கோரிக்கை வைக்கும் விஷால்
‘இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் மேடையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில், சினிமாவிலுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் நேர்மையானவன். அதனால் எதற்கும் பயப்பட மாட்டேன். தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை இந்த பொங்கல் பண்டிகைக்கு முன் அளித்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக அரசுக்கு இதை என் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.