அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன் : நடிகை கஸ்தூரி

Default Image

நடிகை கஸ்தூரி இயக்குநர் சலங்கை துரை இயக்கும், ‘இ.பி.கோ. 302′ என்கிற பெயரில் வெளிவரவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர்  துர்கா ஐ.பி.எஸ். என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது,நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்காக பல கட்சிகள் என்னை அழைத்தன. விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், அரசியல் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன் என்றும், சுயேட்சையாக நிற்க மாட்டேன் என்றும்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்