கோப்ரா படத்திற்காக கடும் ரிஸ்க் எடுத்த சியான் விக்ரம்.!

விக்ரம் காது மற்றும் கண்களில் தண்ணீர் புகுந்ததால் அவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது, இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார், மேலும் படத்தின் படபிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் ஒரு காட்சியில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருக்கும் நிலையில், தண்ணீரில் கயிற்றில் தலைகீழாக குதிக்க வேண்டும் , மேலும் மிக ஆபத்தான இந்த காட்சியில் டூப் யாரும் இல்லாமல் தானே நடிப்பதாக விக்ரம் கூறினாராம்.

மேலும் அந்த காட்சியை மாற்றிவிடலாம் என இயக்குனர் அஜய் ஞானமுத்து கூற, விக்ரம் வேண்டாம் நானே அந்த காட்சியில் நடிக்கிறேன் என கூறி நடித்துள்ளாராம், மேலும் உயிரை பணயம் வைத்து அதில் நடித்த பிறகு விக்ரம் காது மற்றும் கண்களில் தண்ணீர் புகுந்ததால் அவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் விக்ரம் ரசிகர்கள் கோப்ரா படத்தின் அப்டேட்காக காத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.