சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே விட்டு பிடிக்க வேண்டும்..அமைச்சர் பேட்டி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுமார் 79 லட்சத்தில், 1200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ,  தற்போது உடுமலை பகுதியில் சின்னதம்பி யானை நிம்மதியாக இருந்து வருகிறது.மேலும் சின்னதம்பி யானையால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும் , சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே விட்டு தான் பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment