குழந்தைகள் கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை – மருத்துவர்!

குழந்தைகள் கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட சாத்தியமில்லை என மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபரில் உச்சம் தொடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், குழந்தைகள் கொரோனா மூன்றாம் அலையில் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை எனவும், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal