கல்லணையை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

நாளை கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.

நாளை மறுநாள் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார்.

கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக  சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக, நாளை காலை சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கல்லணை கால்வாய்க்கு செல்கிறார்.

அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார்.

author avatar
murugan