முதல்வர் விஜய் ரூபானி இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் – குஜராத் துணை முதல்வர்!

கொரோனா தொற்று காரணமாக மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா எனும் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் திடீரென மயங்கி விழுந்தார். இந்நிலையில் முதல்வர் ரூபானிஅகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் பிரதமர் மோடி அவர்கள் முதல்வர் ரூபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்திருந்தார்.

தற்போது இது குறித்து தகவல் தெரிவித்துள்ள குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அவர்கள், கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal