தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்.!

மறைந்த தலைவா்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவா்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக மரியாதை செலுத்த முடியாமல் இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு  தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை நினைவு நாள் ஜூலை 31-ம் தேதி என்பதால் அன்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியவில்லை,  தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த அரசு அனுமதித்த நிலையில், இன்று சுதந்திர போராட்ட வீர‌ர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், இந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு வீர‌ர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

author avatar
murugan