மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க எடியூரப்பாவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், கர்நாடகாவில் தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்திடமிருந்து எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் களின் காலியிடங்கள் இருப்பதையும், புதிய தனியார் தமிழ் பள்ளிகளைத் திறக்க மாநில அரசும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் குறிக்கிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும், கர்நாடக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தமிழ்ப்பள்ளிகளை தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.