கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை

கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இன்று கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.இந்நிலையில் கோவையில் அமைச்சர் வேலுமணி,         மாவட்ட ஆட்சியர் ராசாமணி ,காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் என பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.