இன்று முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
நேற்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ,அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ,அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.