அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு …!

வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளளது.
இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட உத்தரவில்,மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட  உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல்  திண்டுக்கல் மாவட்டத்தில் 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 24-ம் தேதி முதல் 2019 மார்ச் 2 வரை தண்ணீர் திறந்து விட  உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் தேனி மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் 24-ம் தேதி முதல் 143 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவும்  முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Leave a Comment