கொட்டும் மழையிலும் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்த – முதல்வர் பழனிசாமி.!

கொட்டும் மழையில் 108 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது, அந்த கொட்டும் மழையிலும் 108 அவசர கால ஊர்தி சேவைக்கான 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசர கால ஊர்தி சேவைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.

இதற்கிடையில், தமிழகத்தில் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிகிச்சை பெறுவதற்காக ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக நேற்று  முதல்வர் தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.