பிரதமர் மோடியிடம் 95 பக்க கோரிக்கை மனுவை அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி…!!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 95 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய மனுவில், பேரறிஞர் அண்ணா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்று கோரியுள்ள அவர், முல்லை பெரியாரில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு வழங்கபட்ட முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வெண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட 6 ஆயிரம் கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை, முந்திரி விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு, 625 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment