ஜன.29ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 29-ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், வரும் 29-ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீடிப்பதா அல்லது முழுவதும் ரத்து செய்வதா என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் முதல்வர் பழனிசாமி.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்