குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (11.202) புத்தாண்டை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கும், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.