ரூ.2,371 கோடியில் அடையாறு நதி சீரமைக்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ரூ.2,371 கோடியில் அடையாறு நதி சீரமைக்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

இன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி புதிய  அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் .ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

கோவையில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் .61 ஏக்கரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ரூ .178 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

Join our channel google news Youtube