கொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,  திமுக – காங்கிரஸ் அல்லாத நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.தமிழகத்திற்கான பாஜக மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது.கொடநாடு விவகாரத்தில் முதல்வர் சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார். அரசியல் சூழ்ச்சி காரணமாக இத்தகைய நிகழ்வுகள் என்று கூறியிருக்கிறார்.எது எப்படி இருந்தாலும் அந்த குற்றச்சாட்டை இல்லை என்று நிரூபிக்க வேண்டியது முதல்வரின் கடமை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment