#BREAKING: தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக முன் பெய்த கனமழையால்  பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு வருகிறார். சற்று நேரத்திற்கு முன் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள  ப்ரையண்ட் நகரில் முதல்வர் வெள்ள பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

author avatar
murugan