அமித் ஷாவிடம் கோரிக்கை கடிதம் நேரில் வழங்கிய முதல்வர்.. !

அமித் ஷாவிடம் கோரிக்கை கடிதம் நேரில் வழங்கிய முதல்வர்.. !

உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். பின்னர் முதல்வரும், துணை முதல்வரும் உள்துறை அமைச்சர் நேரில் சந்தித்தனர். அப்போது முதல்வர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், நதிகள் இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தர்மபுரி, விருதுநகர் மாவட்டங்களில் மெகா டெக்ஸ்டைல் பூங்கா அமைக்கவும், இதற்க்கான தொழில் நுட்ப நிதி அளிக்க கோரிக்கை வைத்ததாகவும், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு 50 முதலிட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் உள்ளது.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு சம்மதம் தெரிவிக்க வேண்டும், காவிரி- குண்டாறு, கோதாவரி -காவிரி இணைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *