முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்த ஓபிஎஸ்…!

அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுக்கும் முதல்வர் பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். 

கடந்த ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் வேளைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, ஏ.19-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக  அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பதாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை மருத்துவர்கள் 3 நாட்கள் ஒய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுக்கும் முதல்வர் பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.