106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் ! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

  • ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்தார் சிதம்பரம்.
  • நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அவர் ஜாமீன்  கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது உள்ளிட்ட  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர்  சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சிதம்பரம்சந்தித்தார்.மேலும் சிதம்பரம் நாடாளுமன்றதிற்கு சென்றார்.

இந்த நிலையில் இன்று அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்துள்ளார்.இதனால்   சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர் .கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்டோர் ப.சிதம்பரத்தை வரவேற்றனர்.