4 மணி நேரம் சீனாவில் விடாது பெய்த பனிக்கட்டி மழையால் வாகனங்கள் சேதம்!

பலத்த காற்றுடன்  சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஏற்கனவே இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

4 மணி நேரமாக விடாது கொட்டிய ஆலங்கட்டிகள் வாகனங்களின் மேற்கூரைகளை சேதப்படுத்தின. Nanjing நகர விமான நிலையத்தில் தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் என்ஜினும் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டது. ஆலங்கட்டி மழையால் பெருமளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment