செஸ் ஒலிம்பியாட்- வெற்றி பெற்ற பிரக்யானந்தா..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

முதல் நாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய வீரர்களாக பிரக்யானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் சாத்வனி கலந்து கொண்டனர்.

தற்போது இதில் எஸ்டோனிய வீரரான கிரில் சுகாவை வீழ்த்தி இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா வெற்றி பெற்றுள்ளார். மேலும், பிரக்யானந்தாவுடன் இந்திய அணி வீரர்களான குகேஷ் மற்றும் அதிபன் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment