சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வரும் 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது .

அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.30 முதல் துவங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் அனைவரும் டிக்கெட் எடுக்க விரைந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதன் காரணமாக மைதானத்திற்கு வெளியே நின்று ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.

author avatar
Srimahath

Leave a Comment