சென்னை vs லக்னோ…போட்டியில் இருந்து விலகிய கேப்டன்…அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி  மைதானத்தில் மோதுகிறது.  இரண்டு அணிகளும் சரியான பார்மில் இருப்பதால் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த 1-ஆம் தேதி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக லக்னோ அணியை க்ருனால் பாண்டியா வழி நடத்துவார் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த போட்டியில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் என்பதால் ரசிகர்கள் அனைவரும் சோகத்திலும் அதிர்ச்சியும் உள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக இரண்டு போட்டிகளில் மோதிய நிலையில் ஒரு போட்டியில் சென்னை அணியும் ஒரு போட்டியில் லக்னோனியம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.