#IPL2020: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு

#IPL2020: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 

இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்  மோதுகின்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம் :

ருத்ராஜ் கெய்க்வாட், பாப் டு பிளேசிஸ் , அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஜெகதீசன், சாம் கரண், ரவீந்திர ஜடேஜா,இம்ரான் தாகீர் ,ஷர்துல் தாகூர்  தீபக் சாஹர், லுங்கி என்கிடி    ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம் :

கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங்,மயங்க் அகர்வால்,  கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன்,ஜிம்மி நீசம் , தீபக் ஹூடா, கிறிஸ் ஜார்டன், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வி, 5 போட்டிகளில்  வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன்  புள்ளிபட்டியலில்  கடைசி இடத்தில் உள்ளது.அதைபோல்  பஞ்சாப் அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி, 6 போட்டிகளில்  வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன்  புள்ளிபட்டியலில்  5-ஆம்  இடத்தில் உள்ளது.

Join our channel google news Youtube