சென்னை காவல் உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது.! 2017 முதல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.?

சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வந்த காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

அண்மைக்காலமாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் ஆங்காங்கே அதிகரித்து காணப்படுகின்றன. அந்த குற்ற சம்பவங்களால் குழந்தைகள் வரை பாதிக்கப்படுவது தான் இங்கு வேதனைக்குரிய ஒன்றாகும்.

இதில், பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே போக்சோவில் கைதாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் போக்சோவில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வந்த பாண்டியராஜை  போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அப்பகுதி சிறுமியை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது போலீசார் விசாரணை வட்டத்தில் உதவி ஆய்வாளர் பாண்டிய ராஜ் இருக்கிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment