தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் “குலாப் புயல்” உருவாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம்,  திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube