தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

வளிமண்டல சுழற்சி  காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மிக கனமழை:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி  காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது இந்நிலையில், தொடர்ந்து தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மிதமான மழை:

நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  இடியுடன் கூடிய  மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

கர்நாடகா, கேரளா, வட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பவத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பழநிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் வருகின்ற இன்று முதல் வருகின்ற 27-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

நடு வானில் 2 மலேசியா ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…10 பேர் உயிரிழப்பு!

Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…

15 mins ago

2026ஐ குறிவைக்கும் காங்கிரஸ்.? கேரளாவில் இறங்கி அடிக்கும் ராகுல்.!

Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…

34 mins ago

பிரதமர் பதவியை வகிக்க மோடி தகுதியற்றவர் – செல்வப்பெருந்தகை

Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…

2 hours ago

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை…

2 hours ago

ஏப்.26-ம் தேதி13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல்.!

Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் ஏழு…

4 hours ago

தைவானில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்…மக்கள் அச்சம்.!

Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5…

5 hours ago