சிலை கடத்தல் வழக்கு..!சிபிஐ விசாரிக்க மறுப்பு..!பதில் அளிக்க தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது என தமிழக அரசுக்கு சிபிஐ அனுப்பிய கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் இது தொடரபாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன்? என்று  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியது தொடர்பாக விளக்கம் தேவை என்றும் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அளிக்க தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment