#Breaking:ஆன்லைன் ரம்மிக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு…!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தன.

இவ்வழக்கை,கடந்த ஜூலை 26 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.அப்போது,ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி,ஆன்லைன் விளையாட்டில் திறமை அடங்கி இருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர்.

இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி ”ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்,குறிப்பாக தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.எனவே,பொதுநலன் கருதி இந்த சட்டம் இயற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும்  நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஆக. 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில்,இன்று மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி,தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.