#Breaking : சென்னையில் ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா.! 32 பேர் உயிரிழப்பு.!

#Breaking : சென்னையில் ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா.! 32 பேர் உயிரிழப்பு.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 58,615 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 17,469 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, சென்னையில் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.

Join our channel google news Youtube