சென்னை : மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்யும் முதல்வர்!

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிகளவில் மழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியாக மழை பெய்த மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்றும் சென்னை பெரும்பாக்கம் பகுதியில் முதல்வர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து கொண்டு உள்ளார்.

author avatar
Rebekal